இலங்கை நல்லிணக்க சட்டம்
இலங்கையில் மத, இன, சாதி மற்றும் சிவில் ஐக்கியத்துக்கான
நல்லிணக்கச் சட்டம்
ஒரு வரைவூப் பத்திரம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்தின்
கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது
கௌரவ கரு ஜயசூரிய
இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு ஜுலை மாதம் எட்டாம்
திகதியாகிய இன்று
சிங்கப்பூர் நாட்டின் மத நல்லிணக்கச் சட்டத்தின் பராமரிப்பு
(அத்தியாயம் 167யூ)
மாதிரியைத் தழுவியது
(மூலச் சட்டவாக்கம்: 1990 ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க சட்டம்)
திருத்திய பதிப்பு: 2001 ஜுலை 31
நான்காம் திருத்தம்: 2019 ஜுலை 03
பகுதி I
பூர்வாங்கம்
பிரிவு
பகுதி II
நல்லிணக்க சபையொன்றை தாபித்தல்
பகுதி III
ஒழுங்குகளைக் கட்டுப்படுத்தல்
பகுதி IV
வெளியீடு
இலங்கையில் மதம், இன, சாதி மற்றும் சிவில்
ஐக்கியத்துக்கான
நல்லிணக்கச் சட்டம்
மேலோட்டம்
இந்த வெள்ளைப் பத்திரம்இ நான்கு இனங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றஇ தனியார் மற்றும் வியாபாரத் துறைஇ கல்விசார் மற்றும் துறைசார் வல்லுனர்கள் போன்றௌர்களிலிருந்து இலங்கை மக்களை உள்ளடக்கிய சிவில் சமூகத்தின் ஒரு சுயாதீனக் குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கின்றது.
குறிக்கோள்
‘சகிப்புத்தன்மையூள்ள சமூகமொன்றைப் பேணுவதற்குஇ சமூகம் சகிப்புத்தன்மை இன்மையை சகித்துக்கொள்ளாததாக இருக்க வேண்டும்’கார்ல் பொப்பர், சகிப்புத் தன்மையின்மையின் முரண்பாடு
இலங்கையில் உள்ள சகல மதங்கள்இ இனங்கள்இ சாதிகள்இ மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் இனங்களுக்கிடையிலானஇ கலாசாரங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு மதங்கள்இ இனங்கள்இ சாதிகள்இ மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் பகைஇ வெறுப்புஇ கெட்ட எண்ணம் அல்லது விரோதப் போக்கான உணர்வூகளை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்குமாகும்.
அக்கறைதாரர்கள்
சகல இலங்கையர்கள்
முன்னுரை
இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற கொடூரமான மற்றும் துன்பியல் தற்கொலைத் தாக்குதலின் பின்னர், இனரீதியான நல்லிணக்கமின்மையின் இடையூறான போக்கைத் தீர்ப்பதற்கு அவசரத் தேவையை உருவாக்கியூள்ளது. வெறுக்கத்தக்க, பகைமையான மற்றும் கெட்ட எண்ணம் என்பவற்றின் பரவூதலின் காரணமாக மரணம், வன்முறை, கோபம், நம்பிக்கையின்மை மற்றும் பயம் என்பவற்றுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதோடு அது எமது நாட்டைக் கூறுபடுத்தியதன் விளைவாக எமது நாட்டின் பொருளாதாரத்தையூம் மோசமாகப் பாதித்துள்ளது. இவ்வாறான நிலைமைகளில் அத்தகைய இக்கட்டான நிலைமைக்கு எமது நாடும் மற்றும் எதிர்கால சந்ததிகளும் முழுமையாக மூழ்கடிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு, மத, இன, சாதி மற்றும் சிவில் வேற்றுமை இனிமேலும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது மற்றும் அத்தகைய வேற்றுமையான விடயத்தில் ஈடுபடுகின்ற மற்றும் அதனைத் தூண்டுகின்ற விடயங்களில் மும்முறமாக ஈடுபடுகின்ற நபர்களுக்கு பாதிப்புக்கள் இருக்கும் என்பதையூம் உறுதி செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
முதலாவதாக எழக்கூடிய வினா என்னவென்றால், இந்தப் பிரச்சினை தொடர்பில் போதிய சட்டம் இலங்கையில் இல்லையா என்பதாகும்?
2007ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் (ICCPR Act) இவற்றுக்கிடையில், பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டுதலை ஏற்படுத்துகின்ற போரைப் பிரச்சாரம் செய்யவோ அல்லது தேசிய இன அல்லது மத வெறுப்பை ஆதரிக்கவோ கூடாது எனக் குறிப்பிடப்படுகின்றது என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த ஏற்பாட்டை மீறுவதன் காரணமாக குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒரு ஆள் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேற்படாத காலத்துக்காக கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சமத்துவத்துக்கான உரிமையூம் எமது அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனம், மதம், போன்ற அடிப்படையில் எந்தவொரு பிரசையூம் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என அரசியலமைப்பின் 12(2)ஆம் உறுப்பரை குறிப்பிடுகின்றது. இந்த சட்டவாக்கத்தின் நிலைபேறான தன்மையில் ஏதேனும் எவ்வாறு இருந்த போதும், இலங்கையில் நல்லிணக்கம் என்ற விடயத்தை விசேடமாக குறிப்பிடுகின்ற சட்டம் ஏதும் இல்லையென்பது எமது கருத்தாகும். ஐக்கியம் மற்றும் சகிப்புத் தன்மை என்ற எண்ணக் கருக்கள் சகல பிரசைகள் மத்தியிலும் கட்டியெழுப்பப்பட வேண்டுமாக இருந்த போதும், துரதிர்ஷ்டவசமாக அது தற்போது நடைமுறையில்; இல்லை என்பதோடு, எனவே எத்தகைய சூழ்நிலைகளின் கீழும் வெறுப்பு மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்பவற்றை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என உத்தரவாதமளிக்கின்ற ஒரு சட்ட வரம்பை தௌpவாகத் தாபித்து உருவாக்குவதற்கு கட்டாயமாக நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
“பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள் மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக் கிடையில் பகைமை, வெறுப்பு, கெட்ட எண்ணம் அல்லது விரோதம் போன்ற உணர்வூகளை” ஏற்படுத்துகின்ற தவறொன்றை செய்பவருக்கு தற்போது இலங்கையில் சட்டவாக்கம் ஏதுமில்லை, என்பதோடு எனவேதான் இந்த நல்லிணக்க சட்டம் அத்தகைய வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யூமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR Act) கீழ் வன்முறைகளை தீர்மானிப்பதற்கு (இலங்கை அரசியலமைப்பு சபையால் பரிந்துரைக்கப்பட்டு ஊருவாக்கப்பட்ட தனிப்பட்டவர்கள்) ஒரு சுயாதீன குழுவாக பணியாற்றக் கூடிய ஒரு நல்லிணக்க சபையை உருவாக்குவதற்கு வேண்டுவதனால் குறிப்பிட்ட சட்டத்திலிருந்து நல்லிணக்க சட்டத்தை வேறுபடுத்தி அறியக் கூடியதாக இருக்கும்.
இன்றைய சூழமைவில், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் இனவாதம் என்பன அதிகரிப்பது வழக்கமாகி வருவதனால், இந்த நல்லிணக்க சட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலம் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் இனவாதம் என்பவற்றின் சகிப்புத்தன்மையின்மையானது சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட மாட்டாது என்ற தெளிவான செய்தியொன்றை வழங்குமென நாம் நம்புகின்றோம்.
பாரியளவு சேதம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதோடு பொதுவாக இலங்கையின் பொருளாதாரத்தின் மீதும் மற்றும் முழு சமூகத்தின் மீதும் அண்மைய நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்ற மிகப் பெரிய தாக்கத்தை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், நல்லிணக்க சட்டத்தை சட்டவாக்கம் செய்தலானது எமக்காகவூம் மற்றும் வரக்கூடிய எதிர்கால சந்ததிகளுக்காகவூம் எமது நாட்டை மீள் ஐக்கியமாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல் என்பவற்றை நோக்கிய முதலாவது படிமுறையாக இருக்குமென நாம் உறுதியாக நம்புகின்றௌம்.
இலங்கையில் மதம், இன, சாதி மற்றும் சிவில்
ஐக்கியத்துக்கான
நல்லிணக்கச் சட்டம்
பகுதி I
சுருக்கம்
மதம், இனம், சாதி மற்றும் சிவில் ஐக்கியம் மற்றும் சகல வடிவங்களிலுமான தொடர்பாடல் மற்றும் வெளிப்படுத்தல் என்பவற்றில் வெறுப்பைத் தணித்தல் என்பவற்றுக்கு இடமளிப்பதற்கான ஒரு சட்டம்.
குறுகிய தலைப்பு
இந்தச் சட்டமானது இலங்கையின் நல்லிணக்கச் சட்டம் என எடுத்துரைக்கப்படலாம்.
பொருள்கோடல்
இந்தச் சட்டத்தில், சூழ்நிலை வேறுவகையில் வேண்டாத வரை:
“சபை” என்பது மதம்இ இனம்இ சாதி மற்றும் சிவில் ஐக்கியம் என்பதற்கான தேசிய நல்லிணக்க சபை எனப் பொருள்படும்.
“வெளியீடு” என்பது ஏதேனும் செய்திமடல், நாளேடு, பருவகால வெளியீடு, புத்தகம், திரைப்படம், காணொளி, ஒலிப்பதிவூ அல்லது அதன் உருவமைப்பினால், வடிவத்தினால், அமைப்பினால் அல்லது ஒலியினால்; ஏதேனும் ஒலிப்பதிவை அல்லது பார்வையிடக் கூடிய பிரதிநிதித்துவத்தை செய்யக் கூடிய அல்லது ஏதேனும் ஏனைய முறையில் சொற்களை அல்லது கருத்துக்களை முன்மொழிவதற்கு இயலுமையூடையவற்றை உள்ளடக்கிய ஏதேனும் எழுத்து மூல, புகைப்பட, செவிப்புல அல்லது அச்சிடப்பட்ட விடயம் மற்றும் ஏதேனும் வெளியீட்டின் சகல பிரதிகள் மற்றும் மீள் தயாரிப்பு அல்லது விளைவாந்தன்மையூடைய மீள் தயாரிப்பு என்பவற்றை உள்ளடக்கும்.
“மத இஸ்தாபனம்” என்பது ஒரு விகாரை, தேவாலயம், கெதட்ரல், செபல், சரணாலயம், மஸ்ஜித், கோவில் அல்லது ஏனைய மத ரீதியான வணக்கத்துக்குரிய அல்லது மத நடைமுறை மேற்கொள்கின்ற இடம் எனப் பொருள்படும்.
“மதரீதியான குழு” என்பது பின்வருனவற்றை உள்ளடக்குகின்றது:
பகுதி II
மத, இன, சாதி மற்றும் சிவில் ஐக்கியத்துக்கான ஒரு நல்லிணக்க சபையைத் தாபித்தல
சபையைத் தாபித்தல்
- அ)ஒரு இலங்கைப் பிரசை
- ஆ) 35 இற்கு குறையாத வயதையூடையவர் (உப பிரிவு (iv) j இல் குறிப்பிட்ட ஆள் தவிர்ந்த)
- இ) கீழே உப பிரிவூ (ix) இல் தரப்பட்ட எவையேனும் தகுதியின்மைகளுக்கு பொறுப்பற்றவராக இருத்தல்.
- அ) இலங்கையில் அமுலில் உள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் மன நலம் குன்றியவராக காணப்படுகின்ற அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட ஆள்;
- ஆ) திவாலானவர் அல்லது விடுவிக்கப்படாத வங்குரோத்துக்காரர்;
- இ) இலங்கையில் உள்ள நீதிமன்றம் ஒன்றினால் அல்லது ஏதேனும் ஏனைய வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றினால் குற்றவியல் தவறொன்றுக்கு குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்ற ஆள்;
- ஈ) வெளிநாடொன்றில் சுயமாக குடியூரிமையை பெற்றிருக்கின்ற அல்லது வெளிநாடொன்றில் குடியூரிமை உரிமைகளை பிரயோகிக்கின்ற அல்லது வெளிநாடொன்றுக்கு பற்றுரிமைப் பிரகடனம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்ற ஆள்;
- உ) ஏதேனும் வடிவில்/அமைப்பில் இனரீதியான மற்றும் மதரீதியான தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்ற / எந்த சந்தர்ப்பத்திலும் பரப்பியூள்ள ஆள்;
- ஊ) வெளிநாடொன்றில் குடியூரிமை பெற்றுள்ள ஒரு பிரசை.
- அ) அவர் இலங்கை குடியூரிமையிலிருந்து நீக்கப்படுதல் அல்லது அவர் வோறொரு நாட்டில் குடியூரிமையைப் பெற்றுக் கொள்தல்
- ஆ) அவரின் பதிவியிலிருந்து விலகுவதாக தலைவருக்கு அவரின் கையால் எழுத்து மூல கடிதம் ஒன்றை வரைதலின் மூலம்; அல்லது
- இ) அவர் மேலே (xi) ஆம் உப பிரிவில் குறிப்பிடப்பட்ட தகைமையீனங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆளாகுதல்.
நல்லிணக்க சபையின் பணிகள்
- அ) பிரதமர் அவர்களினால் அல்லது நாடாளுமன்றத்தினால் சபைக்கு ஆற்றுப்படுத்துகின்ற இனரீதியான மற்றும் மதரீதியான நல்லிணக்கத்தைப் பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்: மற்றும்
- ஆ) பிரிவூ 6 உப-பிரிவூ (i) இன் கீழ் பிரதமர் அவர்களினால் குறிப்பீடு செய்யப்படுகின்ற கட்டளைகள் தொடர்பில் கரிசனை கொண்டு நல்லிணக்க சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
அங்கத்தவர் உத்தரவாதம்
இரகசியத் தன்மை
பகுதி III
தடுக்கின்ற கட்டளைகள்
6.
- அ) பல்வேறு மத, இன, சாதி மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் பகை வெறுப்பு தீய எண்ணம் அல்லது விரோதப் போக்கு என்பவற்றை ஏற்படுத்துகின்ற உணர்வூகள்.
- b) ஏதேனும் மத நம்பிக்கை, இளைஞர் வலுவூட்டல் அல்லது சனசமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பரப்புதல் அல்லது நடைமுறைப்படுத்தல் இயக்கம் அல்லது முயற்சி என்ற போர்வையில் ஏதேனும் மோசமான செயலை மேற்கொள்தல்.
- அ) 6ஆம் பிரிவின் உப-பிரிவூ (i) இல் குறிப்பிடப்பட்ட ஏதேனும் மத, அரச, சிவில் அல்லது தனியார் குழுவை, நிறுவனத்தை, அமைப்பை அல்லது தொழில் முயற்சியை அத்தகைய உப-பிரிவில் குறிப்பிட்ட எவையேனும் செயல்களைச் செய்வதற்கு முயல்கின்ற திட்டமிடுகின்ற அல்லது செய்வதற்கு கருத்துக்களைப் பரப்புகின்றதாக காணக்கூடிய எவரேனும் ஆளை தூண்டுதல் வழிநடத்துதல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றிலிருந்து தடுத்தல்.
- ஆ) 6ஆம் பிரிவின் உப-பிரிவூ (i) இல் குறிப்பிடப்பட்ட ஆட்களை தவிர அத்தகைய உப-பிரிவில் குறிப்பிட்ட எவையேனும் செயல்களைச் செய்வதற்கு முயல்கின்ற, திட்டமிடுகின்ற அல்லது செய்வதற்கு கருத்துக்களைப் பரப்புகின்றதாக காணக்கூடிய எவரேனும் ஆளை தூண்டுதல், வழிநடத்துதல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றிலிருந்து தடுத்தல்.
- இ) பிரதமரின் எழுத்து மூல முன் அனுமதியில்லாமல் கட்டளையில் விபரிக்கப்படக் கூடிய ஏதேனும் விடயம், தலைப்பு அல்லது கருப்பொருளில் ஏதேனும் ஒன்றுகூடுதல், திருச்சபை அல்லது வழிபாட்டாளர்கள் குழு அல்லது ஏதேனும் மதக் குழு அங்கத்தவர்கள் அல்லது நிறுவனத்தில் அவர் வாய்மொழி மூலம் அல்லது எழுத்து மூலம் பேசுவதிலிருந்து அல்லது சமர்ப்பிப்பதிலிருந்து அவரைத் தடுத்தல்.
- ஈ) பிரதமரின் எழுத்து மூல முன் அனுமதியில்லாமல் ஏதேனும் மதக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பிரசுரத்தை அச்சடித்தல், வெளியிடுதல், திருத்துதல், விநியோகித்தல் அல்லது எந்தவகையிலும் உதவிசெய்தல் அல்லது பங்களிப்புச் செய்தல் என்பவற்றிலிருந்து அவரைத் தடுத்தல்.
- உ) பிரதமரின் எழுத்து மூல முன் அனுமதியில்லாமல் ஏதேனும் மதக் குழுவின் பிரசுர ஆசிரியர் சபை ஒன்றில் அல்லது வெளியீட்டு குழுவொன்றில் பதவி வகிப்பதிலிருந்து அவரைத் தடுத்தல்.
அபராதங்கள்
பகுதி IV
வெளியீடு
ஊடக ஒழுங்குமுறை
சட்டமா அதிபதி அவர்களின் சம்மதம்
சட்டத்தின் கீழான தீர்மானங்கள் நியாயப்படுத்த முடியாத தன்மை
ஒழுங்குவிதிகள்
12.